நடிகர் சூரி தமிழ் சினிமாவில் ஒரு உச்ச பச்ச காமெடி நடிகர் ஆவார். அவர் சினிமாவுக்குள் நுழைந்த காலகட்டத்தில் கதாநாயகர்களுக்கு நண்பனாகவும் அல்லது சிறு காமெடி ரோல்களில் நடித்து அசத்தி வந்தார். வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சீனில் நடித்ததன் மூலம் இவருக்கு பரோட்டா சூரி என பெயரும் வந்தது. அதிலிருந்து தற்போது வளந்து வந்த சூரி கதாநாயகனாகவும் வெற்றிமாறனின் படத்தில் நடிக்கிறார் அந்தபடமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

விருமன் திரைப்பட விழாவில் கோவில் கட்டுவதை விட, அன்ன சாலை கட்டுவதை விட கல்விச்சாலைகளை பெருக்குவது நல்லது என சூரி பேசியிருந்தார், தற்போது இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பயில்வான் ரங்கநாதன் அவர்களும் ஒரு வீடியோ போட்டிருந்தார்.
உள்ளாடையுடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் கவர்ச்சி விடியோவை வெளியிட்ட நடிகை யாஷிகா
மேலும் சில இந்து அமைப்பினர்கள் விருமன் பட விழாவில் சூரி பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னிப்பு கேட்கும் படி கூறி வருகின்றனர். இதனால் தற்போது விரும்ன் படத்துடைய சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சூரி அவர்கள் :- “நான் மதுரையில் பேசிய கோவில் விவகாரத்தை தப்பாக புரிந்து கொண்டனர். நான் ஒருபோதும் கோவில்களுக்கு எதிரானவன் அல்ல, எனக்கும் மீனாட்சி அம்மனை புடிக்கும். என்னுடைய ஓட்டல்களுக்கும் நான் அம்மன் என்று தான் பெயர் வைத்துள்ளேன்.

அதனால் நான் ஒருபோதும் கோவில்களுக்கு எதிராக பேசுபவன் அல்ல நான் அடிக்கடி மீனாட்சி அம்மன் என்ற வார்த்தையை பயன்படுத்துவேன். நான் ஒரு படிக்காதவன் அதனால் எனக்கு படிப்புடைய அருமை தெரியும் அதனால் தான் நான் அன்று அதை கூறினேன் தவிர அதில் வேறு எந்தவித உள்நோக்கமும் இல்லை என தற்போது தெளிவுபடுத்தி இருந்தார்.
அந்த நிலையில் தற்போது இவர் தனது குடும்பத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்துள்ளார் அந்த பயணத்தின் போது அவரை கோவிலில் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகிய வருகிறது.
