சிம்புவை திருமணம் செய்ய ஆசைப்பட்ட சீரியல் நடிகை ஸ்ரீநிதி தற்போது சென்னை புறநகரான புழல் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சீரியல் நடிகர் ஸ்ரீநிதி கடந்த 2012 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பத்தாம் வகுப்பு c’ பிரிவு என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதைத் தொடர்ந்து ரோமாபுரி பாண்டியன், பகல் நிலவு என பலசீரியல்களில் நடித்தார்.
தற்போது ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலிழும் மற்றும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. கடந்த ஒரு சில மாதங்களாக இன்ஸ்டாவில் சில போஸ்டகளை போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ஸ்ரீநிதி. இவர் போடும் பதிவுகள் எல்லாம் சர்ச்சையை கிளப்பும் வகையில் இருக்கும். வலிமை படம் குறித்து நெகட்டிவ் விமர்சனத்தை இவர் அளித்ததால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ட்ரோல் செய்யப்பட்டார். அதனால் அழுது ஒரு வீடியோவை இன்ஸ்டால் போட்டு அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். அப்போதிலிருந்தே இவர் பேமஸ் ஆகா தொடங்கிவிட்டார்.
எதற்காக விவாகரத்து செய்தேன் …. ? முதல் முறையாக கூறிய சமந்தா

மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகை ஸ்ரீநிதி திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகர் சிம்பு வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவமும் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்து சிம்புவை தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்ற செய்தியை இந்த பதிவின் மூலம் போட்டார். இதுகுறித்து பல்வேறு விவாதங்களும் நடந்தது. மேலும் சீரியல்நடிகை நட்சத்திர உயிருக்கு ஆபத்து எனவும் வீடியோ போட்டு பரபரப்பை கிளப்பினார்.
இதைப் பற்றி அவரது அம்மாவிடம் கேட்டபோது ஸ்ரீநிதி இப்படித்தான் டீப்ரேஷன் ஆக இருக்கும் போது எதையாவது ஒன்றை பேசிவிடுவார். இதிலிருந்து வெளியே வர அவர்கள் நண்பர்கள் தான் உதவி செய்ய வேண்டும் என கூறியிருந்தார். தற்போது சென்னை புறநகரான புழல் பகுதியில் ஒரு சிகிச்சை மையத்தில் கவுன்சிலிங் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் ஸ்ரீநிதி. இது வெறும் ரெகுலர் செக்கப் தான் என்றும் மிக விரைவில் அவர் வீட்டுக்குத் திரும்புவார் எனவும் அவரின் நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
