தமிழ்நாட்டில் இருக்கும் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் யாரும் தெருவில் நடமாட முடியாது இந்துக்களை பகைத்துக் கொள்ளாதீர்கள் என்று பேசிய ஜீயருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எம்பி திருமாவளவன் நெத்தியடி பதிலை அளித்துள்ளார்.
தருமபுரம் ஆதீனத்திற்கு பல்லக்குத் தூக்கும் திருவிழா பட்டிணப்பிரவேசம் என்ற பெயரில் மே 22ஆம் தேதி நிகழ்கிறது. இந்த நிகழ்விற்கு மனிதனை மனிதனே தூக்க வேண்டுமா என்று பல சமூகப் போராளிகளும் திக மற்றும் வீசிக கட்சியின் உறுப்பினர்களும் கேட்டு வருகின்றனர். ஒருவர் இன்னொருவரை தூக்குவது ஏற்றத்தாழ்வுகளையும், சமத்துவத்தையும் அளிக்கிறது என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் ஆதீனம் மாசிலாமணி கண்டிப்பாக பல்லக்கில் ஏறுவார் அதனால் நீங்கள் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என பாஜக இந்து முன்னணி போன்ற வலதுசாரி அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஷவர்மாவால் மறுபடியும் நேர்ந்த ஒரு அசம்பாவிதம் | இந்த முறை தமிழகத்தில்

இந்த நிலையில் மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பகமன்னார் இந்த விவகாரம் குறித்து பேசுகையில் பட்டினப் பிரவேசம் என்பது இந்து சமுதாயத்தில் இருக்கக்கூடிய ஒன்று இதை யாராலும் தடுக்க முடியாது எந்த அமைப்பிற்கும் எந்த அருகதையும் கிடையாது, அரசுக்கும் இதற்கு எந்த அருகதையும் கிடையாது. முடிந்தால் இந்த பட்டின பிரவேசத்தை தடுத்துப் பாருங்கள், யாராலும் இது முடியாது, இந்து மதத்திற்கு விரோதமாக செயல்படும் எந்த அமைச்சரும் எம்எல்ஏவும் சாலையில் நடமாட முடியாது. இந்து மதத்திற்கு எதிரான துரோகிகளுக்கும் எச்சரிக்கை விடுகிறேன் கடுமையான எச்சரிக்கை விடுக்கிறேன் என்று கூறியிருந்தார் ஜீயர்.

ஆளுங்கட்சியை வே இப்படி பேசுகிறாரே இவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் பலர் கேட்டுக் கொண்டு வருகின்றனர். விசிக தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டு இருக்கிறார் அதில் அவர் கூறியது என்னவென்றால் ஆட்சியதிகாரத்தையும் எச்சரிக்கக் கூடிய
ஆற்றல்மிக்க அதிகாரம் கோவில், மடம் ஆகியவற்றின் கருவறைக்கே உள்ளது என்பதை திருமிகு ஜீயரின் கர்ச்சனை உணர்த்துகிறது. ஜனாதிபதியின் அதிகாரத்தைவிடவும் மடாதிபதியின் அதிகாரமே இங்கு மகாபெரியது. இதுதான் சனாதனத்தின் வல்லமை!” என்று நெத்தியடி பதில் கூறியிருக்கிறார்.
இவர் தற்போது திமுக ஆட்சியில் இந்து விரோத ஆட்சி அது இது என்று கூறுகிறாரே… வேறு யாராவது ஆட்சியில் அமர்ந்தால் இப்படி பேச முன் வந்திருப்பார என பலர் விமர்சித்து வருகின்றனர். மேலும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பல கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது.