உக்ரைன் நாட்டில் கடந்த 5 நாட்களாக ரஷ்யப் படைகள் தாக்கி வருகின்றன. இதனால் அங்கு இருக்கும் 15000 இந்தியர்களை அங்கிருந்து மீட்கும் பொருட்டு 4 மத்திய அமைச்சர்களை இந்திய அரசு மேற்பார்வையிட அனுப்புகிறது.
அதன்படி மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ, விகே சிங் ஆகிய நான்கு அமைச்சர்கள் செல்ல இருக்கின்றனர். அவர்கள் அங்குள்ள இந்தியர்களை வெளியேற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவார்கள் என இந்திய அரசு தெரிவித்துள்ளது
உக்ரைனின் எல்லை வழியாக போலாந்துக்கு செல்லும் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் சில பேரை உக்ரைன் ராணுவம் தடுத்து நிறுத்துவதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ராணுவம் இந்திய மாணவர்களை தாக்குவதாகவும் ஒரு வீடியோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தியும் பதிவிட்டுள்ளார்.
My heart goes out to the Indian students suffering such violence and their family watching these videos. No parent should go through this.
— Rahul Gandhi (@RahulGandhi) February 28, 2022
GOI must urgently share the detailed evacuation plan with those stranded as well as their families.
We can’t abandon our own people. pic.twitter.com/MVzOPWIm8D