வேலூர் மாவட்டம் வீரராகவபுரத்தில் அடிபம்புடன் சேர்த்து கழிவுநீரை கால்வாய் கட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இதற்கு முன்னர் வேலூர் மாவட்டத்தில் சிமெண்ட் சாலை போடும்போது சேர்த்து ஓரமாக நின்றிருந்த பைக்கிற்கும் சேர்த்து சிமெண்ட் சாலை போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. எப்படி இது போல அலட்சியமாக ஒரு காரியத்தை அதுவும் அரசு காரியத்தை நீங்கள் செய்கிறீர்கள் என்று வேலூர் மாவட்ட மக்களும் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த சமுக ஆர்வலர்களும் இதனை கண்டித்து கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த செய்தி அனைவதற்குள் தற்போது வேலூர் மாவட்டத்திலேயே வேற ஒரு சம்பவம் அரங்கேரி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.19 வது வார்ட்டில் விஜயராகபுரம் 2வது தெருவில் கால்வாயில் தடுப்பு சுவர் பம்புசெட்டோடு சேர்த்து அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து மாநகராட்சிக்கு இது குறித்து செய்தியை வெளியிட்டு அவர்களிடம் நிலைமையை எடுத்து சொல்லி முறையிட்டனர்.
இது குறித்து பல்வேறு செய்திகள் தற்போது வெளியாகி வந்த நிலையில் அடிபம்புடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் கட்டிய ஒப்பந்ததாரர் சுரேஷ் பாபு என்பவரை கைது செய்துள்ளனர். இவர் மீது பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
