விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கல்யாண நிகழ்வின்போது கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்ததால் ஒருவர் மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக காதலித்து தற்போது திருமணத்தை நடத்தியிருக்கின்றனர். அந்த திருமணத்திற்கு ஆடம்பரமாக செலவு செய்து பல நட்சத்திரங்களை வரவழைத்து அவர்கள் முன் கல்யாணத்தை ஜாம் ஜாம் என்று நடத்தினர். என்னதான் சந்தோசமாக கல்யாணத்தை நடத்தி இருந்தாலும் அந்த கல்யாணம் பொதுமக்களுக்கு மிகவும் வேதனை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
அதற்கு காரணம் என்னவென்றால் மாமல்லபுரத்தில் ஒரு நட்சத்திர ஓட்டலில் இவர்களின் கல்யாணம் நடந்தது. அந்த ஹோட்டலுக்கு அருகே கடற்கரைப் பகுதியும் இருந்தது. இவர்கள் திருமணத்தை ஒரு பிரபல டிஜிட்டல் நிறுவனத்திற்கு பல கோடிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டதால்ம், இவர்களின் கல்யாண போட்டோவையும், வீடியோவையும் யாரும் வீடியோ எடுக்க கூடாது என்பதற்காக செய்தியாளர்களும் பொதுமக்களும் உள்ளே வராதவாறு செக்யூரிட்டி வேலை செய்து வந்தனர்.
மத அரசியலை மேடையில் போல்டாக பேசிய நடிகை சாய் பல்லவி | குவியும் பாராட்டுகள் … என்ன பேசினார் ?

ஒருவரையும் உள்ளே வரவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தன. அதனால் அந்த ஹோட்டலுக்கு பின்புறம் இருக்கும் கடற்கரைக்கு கூட பொதுமக்களை அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஒருவர் மனித உரிமை ஆணையத்திற்கு ஒரு கடிதத்தை புகார் மனுவாக அளித்துள்ளார் அதில் அவர் கூறியது என்னவென்றால் :- “கடற்கரை என்பது பொதுவான இடம், அந்த இடத்தில் இவர்கள் திருமணத்தை வைத்துக் கொண்டு நாங்கள் அங்கே செல்லக்கூடாது என்று சொன்னால் அதில் என்ன நியாயம் இருக்கிறது. இது பொதுமக்களுக்கு வேதனை அளிக்கக்கூடிய ஒரு விஷயமாகும் மனித உரிமையை மீறிய இந்த செயலுக்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென” அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
