பாஜகவில் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண்னிடம் தகாத வார்த்தைகளில் பேசிய திருச்சி சிவா வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்க்க நேரிட்ட பாஜகவின் தலைமையில் இருந்து எந்த விதமான பொது நிகழ்ச்சிகளிலும் திருச்சி சிவா கலந்து கொள்ள வேண்டாம் என பகிரங்கமாக அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியதாவது தமிழக பா.ஜ.க.,வின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணுக்கும், ஓ.பி.சி அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் என் கவனத்திற்கு வந்தது.
இந்தச் சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவர் கனக சபாபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை சமர்ப்பிக்கும் வரை திருச்சி சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்துகிறோம். இவ்வாறு அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Without Beep!
— Surya Born To Win (@Surya_BornToWin) November 22, 2022
Hello @annamalai_k, இவ்வளவு கீழ்த்தரமாக, ஆபசமாக பேசும் @TrichySuriyaBJP மீது என்ன நடவடிக்கை. உங்கள் கட்சியில் இருக்கும் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு?
இவன் சொல்லும் கேசவவிநாயகத்தை தான் மதனும் சொன்னான். விசாக கமிட்டி போட்டு நடவடிக்கை எடுக்கிறேன் என சொன்னது என்ன ஆனது? pic.twitter.com/BEzY7wEgeY