கர்நாடக மாநிலத்தில் இருக்கிற பிரம்மபுரி மலைத்தொடரில் பாறைகள் அதிகளவில் காணப்படும். இந்த மலைத்தொடரில் பலதரப்பட்ட ஊரிலிருந்து இளைஞர்கள் டிரக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் அந்த மலைக்கு டிரக்கிங் சென்ற 19 வயது மட்டுமே ஆன இளைஞர் ஒருவர் எதிர்பாராதவிதமாக அங்கிருந்து தடுமாறி 200 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார்.
இதனை அடுத்து அவருடன் வந்தவர்கள் உடனடியாக கர்நாடக காவல் துறையினருக்கு இதைப் பற்றி தகவல் தெறிவித்தனர். இப்பகுதி மிகவும் செங்குத்தான பாறை என்பதால் அந்த இளைஞர் சிக்கி இருந்த பகுதியில் மீட்பு குழுவை அனுப்பி வெளியே எடுப்பது என்பது முடியாத காரியம்.
அதனால் உடனே இந்திய விமானப் படையினருக்கு தொடர்புகொண்டு ஹெலிகாப்டர் உதவியுடன் மலையில் இருந்து தவறி விழுந்த அந்த இளைஞனை பத்திரமாக மேலே மீட்டுக் கொண்டு வந்தனர். தற்போது அந்த இளைஞரை மீட்டு கொண்டு வந்த ஹெலிகாப்டர் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது பிரம்மகிரி மலையில் 200 அடிக்கு கீழ் சிக்கிய அந்த இளைஞரை காப்பாற்றிய இந்திய விமானப்படையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இது போன்ற மலைகளில் ட்ரெக்கிங் செய்யும்போது மிகவும் சாதுரியமாக செயல்படவேண்டும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அதிகாரிகளும் தற்போது தெரிவித்திருக்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளாவிலும் ஒரு இளைஞன் இப்படி சிக்கிக் கொண்டு பின்னர் 48 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டது குறிப்பிடத்தக்கது.
A 19-year-old trekker who was trapped on Bhramhagiri hill on the outskirts of Bengaluru was rescued by an Indian Air Force helicopter on Sunday evening. According to police, he slipped and fell around 200 feet while climbing Bhramhagiri. pic.twitter.com/WCAm1rK7Mx
— Arun Dev (@ArunDev1) February 20, 2022