தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தான் விஜய் இவர் ஐபேக் நிறுவனர் மற்றும் பிரபல அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் ஐ சந்தித்துள்ளார். எதிர்வரும் 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள புதிய கட்சி தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரசாந்த் கிஷோர் அவர்களே இவரை சந்தித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் இவர்களின் சந்திப்பு நடைபெற்றது என விஜய் சேர்ந்த வட்டாரங்கள் கூறுகின்றது.
விஜய் அரசியல் வருவது தொடர்பாக அவர் கூறுகையில் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து விட்டது அதன் கட்டமைப்பு வலுவாக உள்ளது, அதே நேரம் பாஜக சிறிது சிறிதாக தமிழகத்திற்கு உள்ளே வர ஆயத்தமாகி விட்டது. மறுபுறம் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வியை தழுவியது என்று அவர்கள் ஒருபுறம் கூறுகின்றனர், இந்நிலையில் விஜய் கட்சி தொடங்கினால் அவர்கள் இணைய வாய்ப்பிருக்கிறது. நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் குறைந்தபட்சம் 10 சதவீதம் வாக்குகளை பெற்றது. இதனால் விஜய் கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்தால் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது 2026 சட்டமன்ற தேர்தலுக்குள் மெகா கூட்டணி அமையும் எனவும் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து பாஜகவினர் கூறுகையில் பாஜக தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வந்துவிட்டது இது திமுகவுக்கு பொறுக்கவில்லை அதனால் தான் விஜய்யை தன்னுடன் சேர்த்துக்கொண்டு ஓட்டை பிரிக்கலாம் என்று நினைக்கிறார்கள் எனவே விஜய் திமுகவின் B டீம் என்றே சொல்லலாம் என்கின்றனர்.