மற்றவர்களை மூதேவி என திட்டுவதற்கு முன் சற்று யோசியுங்கள். யார் இந்த மூதேவி தெரியுமா ? தவறாக திரிக்கப்பட்ட உண்மை, புலவர்களால் போற்றப்பட்டவர் இதைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான பதிவை தான் இப்பொழுது நாம் காணவிருக்கிறோம். உண்மையில் மூதேவி யார் ? அவரின் சிறப்புகள் தமிழரை எங்கனம் பெருமைப்படுத்துகிறது ? என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
மூதேவி என்று நாம் ஒருவரை திட்டுகிறோம், செல்வத்தை அள்ளித்தரும் ஸ்ரீ தேவிக்கு எதிர்ப்பதமாக பெயர் மூதேவி. இது அமங்கலமான சோம்பேறி, எதற்கும் உதவாதவன், என்று மூதேவியின் பொருளாக நாம் எதை எதையோ கருதிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் மூதேவி என்பவள் தான் நம் முன்னோர்கள் அனுதினமும் வழிபட்டு வந்த மிகவும் சக்தி வாய்ந்த குல தெய்வம் என்றால் நம்புவீர்களா. இந்த பதிவில் உங்களுக்கு உண்மை விளங்கும்.
பப்ஜி மதன் மீது சுமத்த பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள சென்னை ஐகோர்ட்

தவ்வை என்பவர் பெண் தெய்வங்களில் ஒருவராவார் இவரை மூதேவி, ஜேஷ்டாதேவி, மூத்தோள் என பல பெயர்களில் அழைக்கின்றனர். இவரைத்தான் துரதிஷ்ட கடவுள் என பின்னாளில் திரித்துவிட்டதாக நம்புகின்றனர் பலர். தவ்வை என்னும் மூதேவி சனீஸ்வரனின் மனைவியாகவும் போற்றப்படுகிறார். இவரை பல அரும்பெரும் தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. திருவள்ளுவரும் அவ்வையும் இவரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.
நெல்லாக கருதப்படும் திருமகளுக்கு அக்காவாக மூதேவி உரமாக இருக்கிறார் என்கிறது ஆன்மீகம். ஆனால் தமிழ் அறிஞர்களின் பார்வையில் மூத்த தேவி ஒரு காலத்தில் அவ்வையை போல பெரும்புலவர் ஆக இருந்திருக்க கூடும் என கருதப்படுகிறது. எப்படி எமனை எதிர்ப்பதமான தெய்வமாக வைத்தார்களோ, அதன்படியே மூதேவியாயும் எதிர்மறையாக சோம்பேறி ஆக்கி விட்டனர். உண்மையில் மூதேவி என்பவர் கடவுள் அல்ல, புலவர் என்பது அவர்களுடைய வாதம்.
