உத்திரபிரதேசத்தில் நாயை விரட்டியதற்காக வாட்ச்மேனை பிரம்பால் அடித்த பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
உத்தரபிரதேசத்தில் ஆக்ரா பகுதியில் எல்ஐசி ஆபீஸ் காலனி அமைந்துள்ளது. இந்த காலனிக்கு முன்னால் ராணுவ வீரர் அகிலேஷ் சிங் பாதுகாப்பு காவலராக பணி புரிந்து வருகிறார். இந்த பகுதியில் ஏராளமான தெருநாய்கள் அவ்வப்போது சுற்றித் திரிகிறது. இவற்றை அவர் விரட்டி வருகிறார். இதை கண்ட ஒரு இளம் பெண் அவரை தரை குறைவாக பேசி நாயை ஏன் அடித்தீர்கள் எனத் திட்டி கம்பை கொண்டு சரமாரியாக தாக்கி இருக்கிறார்.


மேலும் அந்த பெண் அவரைப் பற்றி பாஜக விலங்குகள் நல ஆர்வலர் மேனகா காந்தி இடமும் புகார் அளிப்பதாக கூறி பேசியுள்ளார். இந்த வீடியோவை கொண்டு இவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் அந்த பெண் மீது நடவடிக்கை எடுப்போம் என காவல்துறை உறுதி அளித்துள்ளது. மேலும் இந்த வீடியோவை வைத்து காவல் துறையினரிடம் இவர் புகார் கொடுத்தா, புகார் அளித்ததை அடுத்து அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருக்கின்றனர்.

இதை தொடர்ந்து அந்த பெண் ஒரு வீடியோவும் வெளியேற்றுள்ளார். அதில் நான் கடந்த 15 முதல் 18 ஆண்டுகளாக விலங்கு நலனுக்காக போராடி வருகின்றேன். மேலும் எல்ஐசி ஆபீஸ் காலனியில் இருந்து தனக்கு இரண்டு மூன்று முறை அழைப்புகளும் வந்துள்ளது. அதில் நாய்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடைபெறுகிறது என செய்தியை நான் அறிந்தேன். நான் அங்கு நேரில் சென்று பார்த்த போது அந்த காவலாளி கம்பை வைத்து நாய்களை தாக்கிக் கொண்டிருந்தார். அதை நான் தடுக்க முற்பட்டேன், ஆனால் அவர் என்னை அடிக்க தொடங்கினார். இதனால் நான் அவரது கம்பை பறித்து அவரையே அடிக்க தொடங்கினேன். மேலும் அவர் அவருடைய நண்பரை இது வீடியோவாக எடுக்க சொன்னார். மேலும் அவர் மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அந்த பெண் வீடியோவில் பேசி தனது பக்கம் இருக்கும் நியாயத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Shocking video from UP's #Agra! Woman thrashes, abuses society security guard over 'bad behavior' with dogs. pic.twitter.com/XrDSIbT43V
— Aman Dwivedi (@amandwivedi48) August 14, 2022